மகாராஷ்டிரத்தில் புதிதாக 25,833 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,833 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,833 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில்,
கரோனா இரண்டாம் அலையால் மகாராஷ்டிர மாநிலத்தில் தொடர்ந்து தொற்று அதிகரித்தவண்ணம் உள்ளது. அந்தவகையில், கடந்த 24 மணி நேரத் தகவலின்படி,
புதிதாக 25,833 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 2,39,6,340 ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 12,764 பேர் நோயிலிருந்து மீண்டுள்ள நிலையில், 2,17,5,565 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒரேநாளில் 58 பேர் பலியாகியுள்ள நிலையில், 53,138 பேர் இன்றுவரை உயிரிழந்துள்ளனர். 1,66,353 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
கரோனா தொற்று அதிகரித்துள்ளதால் பல மாவட்டங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
புணேவில் ஒரேநாளில் 4,965 பேர் பாதிப்பும் 31 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...