காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

கரோனா எதிரொலி: ஹோலி விற்பனையில் மந்தம்

நாட்டில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஹோலிப் பண்டிகைக்காக வண்ணப் பொடிகள் உள்ளிட்டப் பொருள்களின் விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது.

News image

கரோனா எதிரொலி: ஹோலி விற்பனையில் மந்தம்

Updated On :22 மார்ச் 2021, 8:04 am

ANI


லக்னௌ: நாட்டில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஹோலிப் பண்டிகைக்காக வண்ணப் பொடிகள் உள்ளிட்டப் பொருள்களின் விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது.

வரும் வாரத்தில் ஹோலிப் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுவாக அதற்கு முந்தைய ஞாயிறுகளில் ஏராளமானோர் சந்தைகளுக்கு வந்து வண்ணப் பொடிகள் உள்ளிட்டவற்றை வாங்கிச் செல்வது வழக்கம்.

ஆனால், கரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஹோலிப் பண்டிகையை திட்டமிட்டபடி கொண்டாட முடியுமா என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுந்துள்ளதால், பலரும் சந்தைகளுக்கு வந்து வாங்குவதைக் குறைத்துக் கொண்டுள்ளனர்.

இது குறித்து ஹப்பூர் மொத்த விற்பனைச் சந்தை வியாபாரிகள் கூறுகையில், வழக்கமான அளவில் இல்லாமல் வண்ணப் பொடிகள், தண்ணீர் துப்பாக்கிகள் போன்றவற்றின் விற்பனை குறைந்துள்ளது.

பப்படம் விற்பனை செய்யும் வியாபாரி, இந்த ஆண்டும் விற்பனை மந்தமாகவே இருப்பதாக கவலை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு விற்பனை குறைவுதான் என்கிறார்கள் சில வியாபாரிகள்.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும், ஹோலிக்கு முந்தைய ஞாயிறுகளில் பயங்கர கூட்டமாகக் காணப்படும் சந்தைகளில் இந்த ஆண்டு மிகக் குறைவான மக்களே காணப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.