வேளாண் போராட்டம்: டிக்ரி எல்லையில் விவசாயி பலி
தில்லி நகரின் டிக்ரி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 61 வயதுடைய விவசாயி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.


தில்லி நகரின் டிக்ரி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 61 வயதுடைய விவசாயி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 121-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் ஏராளமான முதியவர்களும் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில், டிக்ரி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 61 வயதுடைய விவசாயி இன்று காலை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இறந்த விவசாயி பஞ்சாப் மாநிலம் பதின்டா பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவர் வேளாண் போராட்டத்தின் தொடக்கத்திலிருந்தே எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...