சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

வேளாண் போராட்டம்: டிக்ரி எல்லையில் விவசாயி பலி

தில்லி நகரின் டிக்ரி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 61 வயதுடைய விவசாயி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :26 மார்ச் 2021, 6:56 am

DIN

தில்லி நகரின் டிக்ரி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 61 வயதுடைய விவசாயி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். 

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 121-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் ஏராளமான முதியவர்களும் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில், டிக்ரி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 61 வயதுடைய விவசாயி இன்று காலை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இறந்த விவசாயி பஞ்சாப் மாநிலம் பதின்டா பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவர் வேளாண் போராட்டத்தின் தொடக்கத்திலிருந்தே எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.