கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோயில் தாக்குதல்

பாகிஸ்தானின் காரிஸன் நகரமான ராவல்பிண்டியில் புதுப்பிக்கப்பட்டு வரும் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோயிலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

News image
பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோயில் தாக்குதல்
Updated On :29 மார்ச் 2021, 8:17 am

PTI

பாகிஸ்தானின் காரிஸன் நகரமான ராவல்பிண்டியில் புதுப்பிக்கப்பட்டு வரும் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோயிலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

நகரின் புராணா கிலா பகுதியில் சனிக்கிழமை 10 முதல் 15 பேர் சுமார் 7.30 மணியளவில் கோயிலில் நுழைந்து, கோயிலின் பிரதான கதவு, மேல்தளத்தில் உள்ள மற்றொரு கதவு மற்றும் படிக்கட்டுகள் சேதப்படுத்தியுள்ளனர்.  

கோவிலினுள் தெய்வச் சிலைகள் மற்றும் வேறு எந்த வழிபாட்டுப் பொருள்களும் இல்லை. கோயிலின் புனிதத்தன்மைக்கு எதிராகச் சேதம் விளைவித்தவர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். 

கடந்த ஆண்டு டிசம்பரில், கைபர்-பக்துன்க்வா மாகாணத்தின் கரக் மாவட்டத்தில் ஒரு கும்பலால் இந்து ஆலயம் தாக்கப்பட்டுச் சேதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.