கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

News image
சரத் பவார்
Updated On :29 மார்ச் 2021, 6:49 am

PTI

மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக கட்சி அமைச்சர் கூறுகையில், 

எங்கள் கட்சித் தலைவர் சரத் பவார் சாஹேப் நேற்று மாலை வயிற்றில் ஏற்பட்ட வலி காரணமாகச் சோதனைக்காக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவருக்கு பித்தப்பையில் சிறு சிக்கல் இருப்பதாகவும், தற்போது அதற்கான மருந்துகள் அவருக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் 
பித்தப்பை பிரச்னையை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

மார்ச் 31-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, எண்டோஸ்கோபி மற்றும் அறுவை சிகிச்சை நடத்தப்பட உள்ளது. 

மேலும், அவர் கலந்துகொள்ளவிருக்கும் நிகழ்ச்சிகள் அனைத்து அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை ரத்து செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார். 

80 வயதாகும் பவார் சனிக்கிழமை அகமதாபாத்தில் உள்ள தொழிலதிபர் இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.