தில்லியில் 55 நாள்களில் 25 காவலர்கள் கரோனாவால் பலி: 4200 பேருக்கு தொற்று பாதிப்பு
தில்லியில் கடந்த 55 நாள்களில் கரோனா தொற்று காரணமாக காவல்துறையைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.


தில்லியில் கடந்த 55 நாள்களில் கரோனா தொற்று காரணமாக காவல்துறையைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. தொற்று பரவல் காரணமாக தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தில்லியில் கடந்த 55 நாள்களில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை 25 காவலர்கள் பலியாகியுள்ளனர்.
குறிப்பாக காவல்துறை கட்டுப்பாட்டு அறை (பி.சி.ஆர்) பிரிவில் பணியாற்றி வந்த காவலர்களில் 441 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...