கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உத்தரகண்டில் இளைஞர்களுக்கு 1 கோடி கரோனா தடுப்பூசி

உத்தரகண்டில் 18 முதல் 44 வயதிற்குட்பட்டோருக்கு 1 கோடி கரோனா தடுப்பூசி ஒதுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் அருணேந்திர சிங் செளஹான் தெரிவித்துள்ளார். 

News image

உத்தரகண்டில் இளைஞர்களுக்கு 1 கோடி கரோனா தடுப்பூசி

Updated On :6 மே 2021, 6:50 am

DIN


உத்தரகண்டில் 18 முதல் 44 வயதிற்குட்பட்டோருக்கு 1 கோடி கரோனா தடுப்பூசி ஒதுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் அருணேந்திர சிங் செளஹான் தெரிவித்துள்ளார். 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா 2-ம் அலை வேகமாகப் பரவி வருகிறது. கரோனாவிலிருந்து காத்துக்கொள்ளும் வகையில் அனைத்து வயதினருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு ஒரு கோடி கரோனா தடுப்பூசி ஒதுக்கப்பட்டுள்ளதாக உத்தரகண்ட் மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார். 

இதனை இளைஞர்களுக்கு மட்டுமே முழுமையாக பயன்படுத்த மாநில சுகாதாரத் துறைக்கு வலியுறுத்தியுள்ளார். 

உத்தரகண்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,783 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.