எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கரோனா நோயாளிகளுக்கு நாள்தோறும் ரூ.5,000: ஹரியாணா அரசு

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக நாள்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர் அறிவித்துள்ளார். 

News image
மனோகர் லால் கட்டர்
Updated On :6 மே 2021, 10:08 am

DIN

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக நாள்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர் அறிவித்துள்ளார். 

வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும், அவர்களது மருத்துவ செலவுக்காக இந்தத் தொகை வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

YouTube video thumbnail

இது தொடர்பாக அவர் பேசியதாவது, கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் நாள்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். அதிகபட்சமாக 7 நாள்களுக்கு என ஒரு நபருக்கு ரூ.35 ஆயிரம் வழங்கப்படும்.

இதேபோன்று தனியார் மருத்துவமனைகளும் அவர்களுக்கு ரூ. 1,000 ஒதுக்க வேண்டும். ஒரு நாளைக்கு ரூ. 1000 வீதம் 7 நாள்களுக்கு ரூ. 7,000 வழங்க வேண்டும். இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு அரசு சார்பில் ரூ.42 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.