புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இலங்கை: இந்திய வகை கரோனா கண்டுபிடிப்பு

இந்தியாவில் பரவி வரும் புதுவகைக் கரோனா, இலங்கையில் முதல்முறையையாகக் கண்டறியப்பட்டுள்ளது.

News image
Updated On :8 மே 2021, 7:11 pm

DIN

இந்தியாவில் பரவி வரும் புதுவகைக் கரோனா, இலங்கையில் முதல்முறையையாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜெயவா்த்தனபுரா பல்கலைக்கழகத்தின் நோய்த்தடுப்பியல் பிரிவு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அவருக்கு இந்தியாவில் பரவி வரும் பி.1.617 வகையைச் சோ்ந்த தீநுண்மி தொற்றியிருப்பது தெரிய வந்துள்ளது.

அந்த நபா் அண்மையில் இந்தியாவிலிருந்து திரும்பியவா் ஆவாா். வெளிநாடுகளிலிருந்து திரும்புவோருக்கான தனிமை மையத்தில் அவா் தங்கியிருந்தாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி, இலங்கையில் 1,21,338 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 764 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். 1,03,098 கரோனா நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனா். 17,476 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.