புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ம.பி.யில் 10 ஆயிரத்தை நெருங்கும் கரோனா

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. புதிதாக 9,715 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

ம.பி.யில் 10 ஆயிரத்தை நெருங்கும் கரோனா

Updated On :10 மே 2021, 4:15 pm

DIN

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. புதிதாக 9,715 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மத்தியப் பிரதேசத்தில் புதிதாக 9,715 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 84 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,501-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 7,324 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக 5,63,754-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 1,11,223 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.