சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

மகாராஷ்டிரத்தில் 18-44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது நிறுத்தம்?

கரோனா தடுப்பூசிக்கான தட்டுப்பாடு காரணமாக மகாராஷ்டிரத்தில் 18-44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்படுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

News image

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோப் (கோப்புப்படம்)

Updated On :11 மே 2021, 12:43 pm

DIN


கரோனா தடுப்பூசிக்கான தட்டுப்பாடு காரணமாக மகாராஷ்டிரத்தில் 18-44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்படுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

இதுபற்றி அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோப் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தது:

"தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ளது. இதனால், 18-44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியைத் தற்காலிகமாக நிறுத்துவது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம். 

இந்த வயதுடையவர்களுக்கு 2.75 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பயன்படுத்தப்படும்.

இரண்டாவது தவணை தடுப்பூசிக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்படுவது குறித்து பரிசீலித்து வருகிறோம்" என்றார் அவர்.

இதைத் தொடர்ந்து, பொது முடக்கம் குறித்து பேசிய அவர், "மகாராஷ்டிரத்தில் பொது முடக்கத்தை நீட்டிப்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் நாளை முடிவெடுக்கப்படும்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.