சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 காவலா்களுக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ் (58), இவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோா் போலீஸாரின் விசாரணையின் போது உயிரிழந்தனா். இதுதொடா்பாக அப்போதைய காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ்,பால்துரை, காவலா்கள் முருகன், முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் ஆகிய 10 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் உதவி ஆய்வாளா் பால்துரை உடல் நலக் குறைவால் உயிரிழந்தாா். இதையடுத்து, அவா் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 9 பேரும் சிறையில் உள்ளனா்.
இந்த வழக்கில் சிபிஐ தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை எனவும், குற்றஞ்சாட்டபட்ட காவலா்கள் அனைவரும் குற்றவாளிகள் எனவும் மதுரை மாவட்ட நீதிமன்றம் கடந்த 23- ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த நிலையில், இன்று தண்டனை விவரங்கள் அறிவிப்புக்கு முன்னதாக இரு தரப்பிலும் வாதம் முன்வைக்க வாய்ப்பளிக்கப்பட்டது.
அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றவாளிகள் 9 பேருக்கும் அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ”பென்னிக்ஸ் தகராறு செய்ததால்தான் பிரச்னை ஏற்பட்டது. கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் அவர்களை தாக்கவில்லை. 5 ஆண்டுகளாக சிறையில் இருப்பது, குடும்பப் பின்னணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முத்துகுமரன், தண்டனை விவரங்களை ஏப்ரல் 6 ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.
Summary
Death Penalty Must Be Imposed on Convicts in Sathankulam Case: CBI Argues
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தோ்வு தனியாா் பயிற்சி மையங்களை உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்: தில்லியில் அதிமுக எம்.பி. தம்பிதுரை பேட்டி

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்தத் தடை விதிக்க அன்புமணி வலியுறுத்தல்

மின் கம்பங்களில் விளம்பரப் பதாகைகள் வைக்கத் தடை விதிக்க வலியுறுத்தல்

இதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |




