சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கீழடி - நாக்பூர் இடையே நடக்கும் போர்; கீழடியிலிருந்து பிரசாரத்தைத் தொடங்குகிறேன்: கனிமொழி

கீழடியிலிருந்து பிரசாரத்தைத் தொடங்குவதாக கனிமொழி எம்.பி. பதிவு

News image

அமைச்சர், திமுக வேட்பாளருடன் கனிமொழி - x / kanimozhi

Updated On :2 ஏப்ரல் 2026, 6:51 am

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கீழடியில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவதாக திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது

"பழந்தமிழ் நாகரிகத்தின் பெருமையைப் பறைசாற்றும் கீழடியிலிருந்து, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான எனது பரப்புரையைத் தொடங்குகிறேன்.

கீழடிக்கும் நாக்பூருக்கும் இடையிலான போராக நடைபெறும் இந்தத் தேர்தலில் தி.மு.கழகம் மகத்தான வெற்றியைப் பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்கும்; தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ந்து காக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ஆகியோருடன் உள்ள புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

MP Kanimozh is commencing her campaign from Keeladi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.