போலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கிறது ஜனநாயக தவெக அரசு! கனிமொழி

அமைச்சர் சரத்குமார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தல்

News image

போராட்டம் நடத்திய திமுகவினர் கைது... - DMK IT wing

Updated On :29 ஜூன் 2026, 12:29 pm IST

ஜனநாயக சக்தி என்று சொல்லிக்கொள்ளும் தவெக அரசு, எதிர்க்கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கிறது என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார், 2 ஆண்டுகளுக்கு முன்னதாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற விடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திமுக மாணவரணி சார்பில் மாநிலம் முழுவதும் இன்று (ஜூன் 29) போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், சென்னை எழும்பூரில் திமுக மாணவரணி போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில்,

"பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவதுபோல வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் சரத்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தி.மு.க. மாணவர் அணி சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததோடு, கழகத்தினரை அராஜகமாக கைது செய்திருக்கிறது தவெக அரசு.

தங்களை தாங்களே ஜனநாயக சக்தி என்று சொல்லிக்கொள்ளும் தவெக அரசு, எதிர்க்கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கிறது.

கைது செய்யப்பட்ட திமுகவினரை உடனடியாக விடுதலை செய்வதோடு, குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

DMK MP Kanimozhi urges for a proper inquiry and action against Minister Sarathkumar

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.