புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ம.பி.: போபாலில் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image

ம.பி.: போபாலில் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Updated On :11 மே 2021, 5:08 am

DIN


மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாநிலத்தின் தலைநகரான போபாலில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி மே 17-ம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கெனவே ஏப்ரல் 12-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மே 10-ம் தேதி வரை கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே கரோனா பரவல் குறையாததால் மேலும் 7 நாள்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

போபாலில் இதுவரை 1,02,776 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 788 உயிரிழந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.