ஒடிசாவில் 10 ஆயிரத்தைத் தாண்டியது ஒருநாள் கரோனா பாதிப்பு
ஒடிசா மாநிலத்தில் நேற்று தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


ஒடிசா மாநிலத்தில் நேற்று தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேர பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,
மாநிலத்தில் புதிதாக 10,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, மொத்த பாதிப்பு 5,76,297 ஆக உயர்ந்துள்ளது.
ஒரேநாளில் 8,547 பேர் நோயிலிருந்து மீண்ட நிலையில், மொத்தம் இதுவரை 4,73,680 ஆக உள்ளது. தற்போது 10,0313 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று பாதித்தோரில் 5,965 பேர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள். மேலும், 4,684 பேர் தொடர்புகளின் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் இதுவரை 1,07,13,098 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...