கரோனாவிலிருந்து கோமியம் நம்மைக் காப்பாற்றும்: பாஜக எம்.பி. 

மாடுகளின் கோமியம் நுரையீரல் பாதிப்பு மற்றும் கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் என போபால் எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்குர் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

மாடுகளின் கோமியம் நுரையீரல் பாதிப்பு மற்றும் கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் என போபால் எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்குர் தெரிவித்துள்ளார்.

போபாலில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சாத்வி பிரக்யா இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது:    

"மாடுகளின் கோமியம் நுரையீரல் பாதிப்பிலிருந்து நம்மைக் காக்கும். எனக்கு நிறைய உடல்நலப் பிரச்னைகள் உள்ளன. ஆனால், தினமும் கோமியம் எடுத்துக்கொள்வேன். 

இதன்பிறகு கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு நான் வேறு எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ளப் போவதில்லை. நான் நோய்த் தொற்றால் பாதிக்கப்படவில்லை. கோமியம் மருந்தை உட்கொள்வதால் கடவுள் என்னைப் பாதுகாப்பார் என நம்புகிறேன்" என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com