பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

'காற்றோட்டம் இல்லாத இடங்களில் கரோனா பரவும்'

கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க காற்றோட்டமான இடத்தில் வசிப்பது அவசியம் என மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :20 மே 2021, 7:55 am

DIN

கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க காற்றோட்டமான இடத்தில் வசிப்பது அவசியம் என மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது: 

கரோனா ஏற்படாமல் தடுக்க சமூக இடைவெளி, முகக்கவசத்துடன் காற்றோட்டம் இருக்க வேண்டும். வீடுகளில் ஜன்னல், கதவுகளைத் திறந்து வைத்திருப்பது நல்லது. 

வீட்டில் கதவு, ஜன்னல்களை பூட்டியிருந்தால் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மின்விசிறி மூலமாக கூட கரோனா பரவ வாய்ப்புள்ளது. 

எனவே நாம் தங்கியிருக்கும் வீட்டில் அறைகளில் காற்றோட்டம் இருந்தால் காற்றில் உள்ள வைரஸின் அளவு குறையும். அலுவலங்களிலும் காற்றோட்டமான சூழ்நிலை இருப்பது நல்லது. காற்றோட்டம் குறைவான வீடுகளில் 'எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன்' எனும் காற்று வெளியேற்றும் விசிறியை வைக்கலாம் என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக, வைரஸ் பரவலைத் தடுக்க அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். காற்றோட்டமான இடத்தில் இருக்க வேண்டும் என்ற 3 வழிகளை அவர் குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.