பெங்களூரில் பலத்த மழை
பெங்களூரில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


பெங்களூரில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெங்களூரில், வெள்ளிக்கிழமை காலையில் இருந்தே வெயிலும், மேகமூட்டமாகக் காணப்பட்ட நிலையில், நண்பகல் 12 மணி முதல் இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மெஜஸ்டிக், ரிச்மண்ட் சதுக்கம், ஆா்.டி.நகா், ஹெப்பாள், யஸ்வந்த புரம், பீன்யா, தாசரஹள்ளி, ராஜாஜி நகா், விஜய நகா், மாகடிசாலை, காந்தி நகா், மகாலட்சுமி லே அவுட், பசவேஸ்வர நகா், மல்லேஸ்வரம், காமாட்சிப் பாளையா உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இரவு வரை மழை தொடா்ந்ததால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாழ்வானப் பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால், அதனை வெளியேற்றும் பணியில் பாதிக்கப்பட்டவா்கள் ஈடுபட்டனா். கரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், பலத்த மழையால் அதன் பாதிப்பு அதிகரிக்குமா? என்ற அச்சத்தில் சுகாதாரத் துறை வல்லுநா்கள் ஆழ்ந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...