பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

கோவாவில் கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு சிறப்புப் படுக்கைகள் தயார்: சுகாதார அமைச்சர் 

கோவாவில் கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 20 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டை அமைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

News image
Updated On :21 மே 2021, 8:51 am

கோவாவில் கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 20 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டை அமைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, 
கோவாவில் இதுவரை ஆறு பேர் கருப்பு பூஞ்சை நோய்ப் பாதிப்பு பதிவாகியுள்ளன. அதில் ஒருவர் உயிரிழந்தார். 

மாநிலத்தின் சிறந்த மருத்துவக் கல்லூரியான கோவா மருத்துவக் கல்லூரியில் 60 படுக்கைகள் கொண்ட, சிறப்பு மருத்துவ ஐ.சி.யு அமைக்கப்படுவதாகவும், அதன் திறனை 100 படுக்கைகளாக உயர்த்த முடியும் என்றும் ரானே கூறினார்.

முதல்வரின் வழிகாட்டுதலின் படி, சிக்கலான நிலைமையைச் சமாளிக்க உள்கட்டமைப்பை நாங்கள் தயார் செய்து வருகிறோம் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.