பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

பாகிஸ்தானில் 20 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி

கரோனா தொற்று நோய்களின் மூன்றாவது அலைகளைக்கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடிவரும் நிலையில், பாகிஸ்தானில் கரோனா பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

News image

பாகிஸ்தானில் 20 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி

Updated On :21 மே 2021, 12:20 pm

கரோனா தொற்று நோய்களின் மூன்றாவது அலைகளைக்கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடிவரும் நிலையில், பாகிஸ்தானில் கரோனா பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

வியாழக்கிழமை நிலவரப்படி 100-க்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்பு 20,089 ஆக உயர்ந்துள்ளது. 

ஒரேநாளில் 3000 பேர் நோய்த் தொற்று பதிவாகியுள்ளதையடுத்து, மொத்தம் இதுவரை 8,93,461 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பாகிஸ்தானில் இதுவரை சுமார் 5 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் தடுப்பூசி கிடைக்காதது மற்றும் உலகளாவிய விநியோக முறையான கோவாக்ஸின்  வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.