பாகிஸ்தானில் 20 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி

கரோனா தொற்று நோய்களின் மூன்றாவது அலைகளைக்கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடிவரும் நிலையில், பாகிஸ்தானில் கரோனா பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 
பாகிஸ்தானில் 20 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி
பாகிஸ்தானில் 20 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி
Updated on
1 min read

கரோனா தொற்று நோய்களின் மூன்றாவது அலைகளைக்கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடிவரும் நிலையில், பாகிஸ்தானில் கரோனா பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

வியாழக்கிழமை நிலவரப்படி 100-க்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்பு 20,089 ஆக உயர்ந்துள்ளது. 

ஒரேநாளில் 3000 பேர் நோய்த் தொற்று பதிவாகியுள்ளதையடுத்து, மொத்தம் இதுவரை 8,93,461 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பாகிஸ்தானில் இதுவரை சுமார் 5 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் தடுப்பூசி கிடைக்காதது மற்றும் உலகளாவிய விநியோக முறையான கோவாக்ஸின்  வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com