தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

'தடுப்பூசி போடவில்லை எனில் சம்பளம் இல்லை' - சத்தீஸ்கர் அதிகாரி அதிரடி!

சத்தீஸ்கர் மாநில பழங்குடியினர் நலத்துறை அதிகாரி ஒருவர், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஊழியர்களுக்கு ஊதியம் நிறுத்திவைக்கப்படும் என அறிவித்துள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :27 மே 2021, 7:24 am

DIN

சத்தீஸ்கர் மாநில பழங்குடியினர் நலத்துறை அதிகாரி ஒருவர், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஊழியர்களுக்கு ஊதியம் நிறுத்திவைக்கப்படும் என அறிவித்துள்ளார். 

சத்தீஸ்கர் மாநிலம் கவுரெலா-பெந்திரா-மார்வாஹி மாவட்டத்தில் உதவி ஆணையராக இருப்பவர் கே.எஸ் மஸ்ராம். இவர், மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் நலத்துறை அலுவலகங்கள், ஆசிரமங்கள் (குடியிருப்பு பள்ளிகள்) மற்றும் விடுதிகளில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு தடுப்பூசி போடவும் தடுப்பூசி செலுத்தியதற்கான அந்தந்த அட்டைகளை அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஊழியராகள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாவிட்டால், அடுத்த மாதத்திற்கான அவர்களின் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

கரோனா தொற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள தடுப்பூசி செலுத்துக்கொள்ளுமாறு மத்திய அரசும் அந்தந்த மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன. வாய்ப்பிருந்தும் பலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்து வரும் நிலையில் இதுபோன்ற உத்தரவுகள் தேவை தான் என்று சமூக ஊடகங்களால் நெட்டிசன்கள் கருத்து பதிவிடுகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.