விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

மோடியின் ஆணவத்தால் 97 சதவிகித இந்தியர்களின் வருமானத்தில் சரிவு: ராகுல் சாடல்

​பிரதமர் நரேந்திர மோடியின் ஆணவப் போக்கால் 97 சதவிகித இந்தியர்கள் கரோனாவுக்குப் பிறகு ஏழையாகிவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை விமரிசித்தார்.

News image

பொது முடக்க காலத்தில் பேருந்து நிறுத்ததில் ஓய்வெடுக்கும் தொழிலாளர்கள்

Updated On :31 மே 2021, 11:03 am

DIN


பிரதமர் நரேந்திர மோடியின் ஆணவப் போக்கால் 97 சதவிகித இந்தியர்கள் கரோனாவுக்குப் பிறகு ஏழையாகிவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை விமரிசித்தார்.

ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில், இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் வியஸ் தரவுகளைப் பகிர்ந்துள்ளார். அந்த தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது:

"இந்தியாவில் ஊதியத்துக்கு வேலைப் பார்க்கும் எண்ணிக்கையில் பெரிதளவு சரவி ஏற்பட்டுள்ளது. 97 சதவிகித இந்தியர்களுக்கு வருமானம் குறைந்துள்ளது. இந்திய மக்கள் தொகையில் 97 சதவிகிதத்தினர் கடந்தாண்டு வருமானத்தைக் காட்டிலும் இந்தாண்டு ஏழையாகியுள்ளனர்."

இதனைப் பகிர்ந்த ராகுல் சுட்டுரையில், "ஒற்றை நபர், அவரது ஆணவம் மற்றும் ஒற்றை வைரஸ், அதன் உருமாற்றங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.