விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மாட்டுத் தொழுவமாக மாறிய ஆரம்ப சுகாதார நிலையம்

பிகாரில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று மாட்டுத் தொழுவமாக மாறியுள்ளது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

News image
Updated On :31 மே 2021, 7:14 am

DIN

பிகாரில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று மாட்டுத் தொழுவமாக மாறியுள்ளது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பிகார் மாநிலம் கதிஹார் பகுதியின் சமேலி கிராமத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் முறையாக செயல்படாததால், காலப்போக்கில் மாட்டுத் தொழுவமாக மாறியுள்ளது.

மேலும், சுற்றுப்புறப் பகுதியிலுள்ள பல ஆரம்ப சுகாதார நிலையங்களும், செயல்படாமல் பாழடைந்த கட்டடங்களாக மாறி புதர்மண்டிக் கிடக்கின்றன.

இது தொடர்பாக பேசிய அப்பகுதி மக்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களைப் பொறுத்தவரை பிகாரின் பல பகுதிகளில் இதுபோன்ற நிலையே உள்ளது. 

இங்கு  மருத்துவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பலமுறை கடிதம் மூலம் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.