உத்தரப் பிரதேச மாநிலம் சண்டவுலி பகுதியில் ரயில் தடம் புரண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க | பிரதமர் மோடி தலைமையில் அகில இந்திய அவைத் தலைவர்கள் மாநாடு துவக்கம்
அலகாபாத்திலிருந்து தீனதயாள் உபத்யாயா வரை சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் சண்டவுலி பகுதியில் திடீரென 8 பெட்டிகளுடன் தடம் புரண்டதில் அம்மார்க்கமாக செல்லும் பிற ரயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
தடம் புரண்டது குறித்து சோதனை செய்த அதிகாரிகள் சீரமைப்புப் பணியைத் துவக்கி உள்ளனர்.
மேற்கொண்டு போக்குவரத்து தடைபடமால் இருக்க மாற்றுப் பாதையில் ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய கிழக்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.