பிரதமர் மோடி தலைமையில் அகில இந்திய அவைத் தலைவர்கள் மாநாடு துவக்கம்

சிம்லாவில் 82-ஆவது அகில இந்திய அவைத் தலைவர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று புதன்கிழமை (நவ. 17)  தொடக்கி வைத்திருக்கிறார். 
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

சிம்லாவில் 82-ஆவது அகில இந்திய அவைத் தலைவர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று புதன்கிழமை (நவ. 17)  தொடக்கி வைத்திருக்கிறார். 

இதில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள், அனைத்து மாநில சட்டப்பேரவைத் தலைவர்கள், பேரவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்து சிறப்புரையாற்றிக் கொண்டிருக்கிறார். மாநாட்டின் இறுதியில் ஹிமாச்சல பிரதேச ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நன்றி உரையாற்றுகிறார்.

இந்த மாநாட்டில், இந்த அமைப்பின் நூற்றாண்டுப் பயணம்-மதிப்பீடு, முன்னோக்கிச் செல்லும் வழிகள்; அரசியலமைப்பு, அவையை நடத்துதல், மக்கள் மீதான பொறுப்பு ஆகிய தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com