மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தேனாம்பேட்டை - சைதை மேம்பாலப் பணி: முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை வரையிலான மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்.

News image
Updated On :4 மார்ச் 2026, 1:06 pm

இணையதளச் செய்திப் பிரிவு

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை நடைபெற்று வரும் உயர்நிலைப் பாலம் அமைக்கும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று(மார்ச் 4) ஆய்வு செய்தார்.

இந்த உயா்நிலை சாலையின் மூலம் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.20 கி.மீ. தொலைவை 3 முதல் 5 நிமிஷத்திலேயே கடந்து செல்லலாம்.

மேலும் கட்டுமானம் நிறைவடையும்போது சென்னை மாநகரின் மிக நீண்ட பாலமாக இப்பாலம் அமையும் என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு பாலத்தின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் இரும்பினாலான முன்வார்க்கப்பட்ட கட்டமைப்பு உபகரணங்களைக் கொண்டும், மண்ணின் தாங்கு திறனை நவீன தொழில்நுட்பத்தை கொண்டு மேம்படுத்தி அடித்தளம் அமைக்கும் வகையிலும், வடிவமைக்கப்பட்டு கட்டுமான பணிகள் ரூ.621 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3.20 கி.மீ. நீளத்திற்கு கட்டப்பட்டு வரும் நான்கு வழித்தட உயர்மட்டச் சாலையின் கட்டுமானப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பணிகளை விரைந்திட முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பாலத்தின் தூண்களுக்கான பணிகள் முடிவுற்ற பகுதிகளில் போக்குவரத்தினை சீர்செய்திட நடவடிக்கை எடுக்குமாறும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளர் மருத்துவர் இரா. செல்வராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.