மும்பை ரயில் நிலையத்தில் முதல்முறையாக ‘அர்பன்பாட்’ எனப்படும் அதிநவீன ஓய்வு அறைகளை ரயில்வே துறை இணையமைச்சர் ராவ்சாகேப் தாதாராவ் பட்டீல் தன்வே திறந்து வைத்தார்.
உலகில் முதல்முறையாக ஒருவர் மட்டுமே படுக்கும் வகையில் குறுகிய இடத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய படுக்கைகளை உருவாக்கி ‘பாட்’ எனப் பெயரிட்டு ஜப்பான் அறிமுகப்படுத்தியது.
தொழில்ரீதியாக அல்லது தனிநபராக ஒரு இடத்திற்கு செல்வோர் குறிப்பிட்ட இடத்தில் ஒரு இரவு மட்டும் மலிவான விலையில் தங்குவதற்காக பாட் முறை உருவாக்கப்பட்டது.

இந்த ‘பாட்’ ஓய்வு அறையை மும்பை மத்திய ரயில் நிலையத்தில் முதல்முறையாக இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. மொத்தம் 48 படுக்கைகளை கொண்ட இந்த ஓய்வு அறைகள் நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அதில், பெண்கள் பிரத்யேக அறைகள் 7, 30 கிளாஸிக் அறைகள், 10 பிரைவேட் அறைகள், ஒரு மாற்றுத்திறனாளி அறையாகும். இந்த அறைகள், ஒருவர் படுக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு அறைகளிலும் தொலைக்காட்சி, லாக்கர், இணையவசதி, கண்ணாடி, குளிரூட்டி, பொது இடத்தில் ஒவ்வொரு அறைக்கும் தனிக் கழிவறை உள்ளன.
இந்த அறைகளில் தங்குவதற்கு கட்டணமாக 12 மணிநேரத்திற்கு ரூ. 999 முதல் ரூ. 1499 வரையும், 24 மணிநேரத்திற்கு ரூ. 1999 முதல் 2999 வரையும் வசூலிக்கப்படுகிறது.

இந்திய ரயில்வே துறையுடன் இணைந்து அர்பன் பாட் என்ற நிறுவனம் இந்த அறைகளை வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


