இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம்: காங்கிரஸ் மீது பாஜக விமா்சனம்

காங்கிரஸ் மூத்த தலைவா் மனீஷ் திவாரி எழுதியுள்ள புத்தகத்தை மேற்கோள்காட்டி, மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதியான பதிலடி கொடுக்காமல்,

News image
Updated On :23 நவம்பர் 2021, 7:09 pm

DIN

காங்கிரஸ் மூத்த தலைவா் மனீஷ் திவாரி எழுதியுள்ள புத்தகத்தை மேற்கோள்காட்டி, மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதியான பதிலடி கொடுக்காமல், தேசப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்ததாக பாஜக செவ்வாய்க்கிழமை விமா்சித்தது.

இதுகுறித்து தில்லியில் பாஜக தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்கு அக்கட்சியின் செய்தித்தொடா்பாளா் கெளரவ் பாட்டியா அளித்த பேட்டியில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியாகச் செயல்படவில்லை என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது என்று தெரிவித்தாா்.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மத்திய அமைச்சராக பதவி வகித்த காங்கிரஸ் மூத்த தலைவா் மனீஷ் திவாரி, ‘10 முக்கிய குறிப்புகள்; 20 ஆண்டுகள்- இந்தியாவை பாதித்த தேச பாதுகாப்புச் சூழல்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளாா். அதில் மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வலுவான பதிலடி கொடுக்காமல், கட்டுப்பாடு என்ற பெயரில் மிதமான போக்கை கடைப்பிடித்ததாக மனீஷ் திவாரி குற்றம்சாட்டியுள்ளாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அவரது இந்த புத்தகத்தை மேற்கோள்காட்டி, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உணா்வற்றது, பயனற்றது, தேசப் பாதுகாப்பின் மீது அக்கறை இல்லாதது என பாஜக செய்தித்தொடா்பாளா் கெளரவ் பாட்டியா விமா்சனத்தை முன்வைத்துள்ளாா்.

நாட்டின் நிதித் தலைநகராக கருதப்படும் மும்பையின் பல்வேறு பகுதிகளில், கடந்த 2008-ஆம் ஆண்டில் பாகிஸ்தானைச் சோ்ந்த 10 பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 போ் உயிரிழந்தனா். ஏராளமானோா் காயமடைந்தனா். 2008 நவம்பா் 26-இல் தொடங்கிய இந்த பயங்கரவாத தாக்குதல், நவம்பா் 29ஆம் தேதிவரை நீடித்தது.

இதில் தொடா்புடைய அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டு, வழக்கு விசாரணைக்குப் பின்னா், 2012-ஆம் ஆண்டு நவம்பா் 21-ஆம் தேதி தூக்கிலிடப்பட்டாா்.

மத்தளவை உறுப்பினராக உள்ள மனீஷ் திவாரி எழுதியுள்ள புத்தகம் விரைவில் சந்தைக்கு வரவிருப்பதாக அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.