இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

புதிய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதற்கு பாஜக தொண்டர்களே காரணம்: உமாபாரதி

பாஜக தொண்டர்கள் புதிய வேளாண் சட்டங்கள் குறித்த புரிதலை விவசாயிகளுக்கு ஏற்படுத்தாமல் இருந்ததாலேயே அச்சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதாக மத்திய அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.

News image
புதிய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதற்கு பாஜக தொண்டர்களே காரணம்: உமாபாரதி
Updated On :23 நவம்பர் 2021, 7:53 am

DIN

பாஜக தொண்டர்கள் புதிய வேளாண் சட்டங்கள் குறித்த புரிதலை விவசாயிகளுக்கு ஏற்படுத்தாமல் இருந்ததாலேயே அச்சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதாக மத்திய அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரதமர் மோடி அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றதற்கு பாஜக தொண்டர்களே காரணம் என மத்திய அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் அவர், “என்னைப் போன்றவர்களுக்கு பிரதமரின் அறிவிப்பு வலியை ஏற்படுத்தியிருக்கிறது. வேளாண் சட்டங்களைக் குறித்த முக்கியத்துவத்தை விவசாயிகளின் மத்தியில் ஏற்படுத்த முடியாததற்கு பாஜக தொண்டர்களே காரணம். நம்மால் ஏன் வேளாண் சட்டங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்ல முடியவில்லை? என உமாபாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.