கடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

கெளதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்: வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பியுமான  கௌதம் கம்பீருக்கு "ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்' எனும் அமைப்பிடமிருந்து மின்னஞ்சலில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

News image
Updated On :24 நவம்பர் 2021, 11:12 pm

 நமது நிருபர்

புது தில்லி: முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பியுமான  கௌதம் கம்பீருக்கு "ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்' எனும் அமைப்பிடமிருந்து மின்னஞ்சலில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, தில்லியில் உள்ள அவரது வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:  
கம்பீரின் அதிகாரபூர்வ மின்னஞ்சலுக்கு செவ்வாய்க்கிழமை இரவு 9.32 மணிக்கு  "ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்' அமைப்பில் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
இந்த விவகாரம் குறித்து விசாரித்து, முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்து, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர். 
இது குறித்து துணை காவல் ஆணையர் ஸ்வேதா சௌகான் கூறுகையில், "அடையாளம் தெரியாத நபர் அனுப்பியுள்ள மின்னஞ்சலில், கௌதம் கம்பீரையும், அவரது குடும்ப உறுப்பினர்களையும் கொன்றுவிடுவதாக மிரட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக  விசாரணை நடந்து வருவதால், இந்த விவகாரத்தில் இதுவரை எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை' என்று அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.