நவம்பர் 29 அவசியம் வர வேண்டும்: பாஜக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு கொறடா உத்தரவு
நவம்பர் 29-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்று அரசு நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என பாஜக தலைமை கொறடா உத்தரவிட்டுள்ளார்.


நவம்பர் 29-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்று அரசு நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என பாஜக தலைமை கொறடா உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 29-ம் தேதி தொடங்கவுள்ளது. இக்கூட்டத்தொடரில் 26 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதவிர்த்து 3 மசோதாக்கள் நிலைக்குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மாநிலங்களவையில் நவம்பர் 29-ம் தேதி சில முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதால், உறுப்பினர்கள் அனைவரும் தவறாது அவை நடவடிக்கைகளில் பங்கேற்று அரசு நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என பாஜக தலைமை கொறடா ஷிவ பிரதாப் சுக்லா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...