நாட்டில் 70% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 70 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்)
மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்)
Updated on
1 min read

நாடு முழுவதும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 70 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று வெளியிட்ட செய்தியில்,

சர்வதே அளவில் அதிகளவிலான பொது மருந்துகளை இந்தியா தயாரித்து வருகின்றது. உலகம் முழுவதும் உள்ள 150 நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மேலும், நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேருக்கு முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

நாட்டில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 91 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது. மேலும், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவட்தற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com