ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
தீபாவளிப் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு பண்டிகை கால போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் அனுராக் கூறியது:
ரயில்வே துறையில் அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 11.56 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவித்தார்.