25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்கள் சுட்டுக்கொலை: அமித் ஷா நாளை ஆலோசனை

ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்கள் சுட்டுகொல்லப்படுவது அதிகரித்து வரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா தில்லியில் நாளை (அக். 9) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

News image
அமித் ஷா (கோப்புப் படம்)
Updated On :28 ஜனவரி 2024, 4:19 am

DIN

ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்கள் சுட்டுகொல்லப்படுவது அதிகரித்து வரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா தில்லியில் நாளை (அக். 9) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

ஜம்மு-காஷ்மீர் லெப்டினெட் ஜெனரல் மனோஜ் சின்ஹா தலைமையிலான குழுவும் ஆலோசனையில் பங்கேற்கவுள்ளது.

சமீபகாலமாக எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடக்கும்போது பொதுமக்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் மக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

நேற்று ஸ்ரீநகர் அருகே இட்கா சங்கம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்கு முன்பு 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

2021-ம் ஆண்டு மட்டும் இதுவரை 28 பொதுமக்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.