புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

அச்சம் கொள்ள வைக்கும் மின் தடை; மத்திய மின்துறை அமைச்சர் தந்த விளக்கம்

மோடிக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் எழுதிய கடிதத்தில், மின்சார ஆலைகளுக்கு விநியோகம் செய்யப்படும் நிலக்கரி அதிகரிக்கப்படாவிட்டால், தில்லியில் மின் நெருக்கடி ஏற்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

News image
ஆர். கே. சிங்
Updated On :10 அக்டோபர் 2021, 10:21 am

DIN

கெயில் மற்றும் டாடா நிறுவனங்களிலிருந்து வரும் தவறான தகவல்களால் நிலக்கரி பற்றாக்குறை குறித்து தேவையற்ற பீதி உருவாக்கப்படுவதாக மத்திய மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ஆர். கே. சிங் தெரிவித்துள்ளார். 

மின் உற்பத்தி குறித்து தேசிய தலைநகர் தில்லி உள்பட ஆறு மாநிலங்கள் கவலை தெரிவித்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து விரிவாக அவர் பேசுகையில். "எங்களிடம் போதுமான மின்சாரம் உள்ளது. நாங்கள் முழு நாட்டிற்கும் மின்சாரம் வழங்குகிறோம். யார் வேண்டுமானாலும், எனக்கு ஒரு கோரிக்கையை கொடுங்கள், நான் அவர்களுக்கு மின்சாரம் வழங்குவேன்.

தேவையற்ற பீதி உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் நான்கு நாட்களுக்கு தேவையாக இருப்பு உள்ளது. தில்லியில் தொடர்ந்து மின்சாரம் கிடைக்கும். மின் தடை இருக்காது. உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் கட்டணங்களைப் பொருட்படுத்தாமல் அதன் விநியோகம் தொடரும். எந்த சூழ்நிலையிலும் எரிவாயு விநியோகம் நிறுத்தப்படாது.

தில்லி மட்டுமின்றி, தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படவுள்ளதாக கவலை தெரிவித்துள்ளன. குறிப்பாக, பஞ்சாபில் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அங்கு பல பகுதிகளில் சுழற்சி முறையில் மின் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

மின் நெருக்கடி குறித்து பிரதமர் மோடிக்கு தில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால் எழுதிய கடிதத்தில், மின்சார ஆலைகளுக்கு விநியோகம் செய்யப்படும் நிலக்கரி அதிகரிக்கப்படாவிட்டால், தேசிய தலைநகரில் மின் நெருக்கடி ஏற்படலாம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

விநியோகம் பாதிக்கப்படவுள்ளதாக கெயில் இந்திய நிறுவனத்தின் அலுவலர்கள் தவறான தகவல் அளித்த பிறகு மின் நெருக்கடி குறித்த பீதி உருவானதாக ஆர். கே. சிங் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களிடமிருந்து விளக்கம் கேட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "தேவைக்கு ஏற்றார்போல் நிலக்கரி பெறப்பட்டுள்ளது. நான்கு நாள்களுக்கு தேவைப்படும் இருப்பு நம்மிடம் உள்ளது. இதன் மூலம் நாட்டில் பற்றாக்குறை ஏற்படாது என்பது தெரியவந்துள்ளது. நமக்கு மின்சாரம் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டுவருகிறது" என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.