தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆர்யன் கான் ஜாமீன் மனு: விசாரணை ஒத்திவைப்பு

போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image

ஆர்யன் கான் (கோப்புப் படம்)

Updated On :13 அக்டோபர் 2021, 4:02 pm

DIN


போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மும்பை நீதிமன்றம் ஜாமீன் மனுவின் மீதான விசாரனையை நாளைக்கு (அக். 13) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்.3-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சொகுசு கப்பலில் போதைப் பொருள்களுடன் இருந்த ஆா்யன் கான் உள்பட 8 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினா் (என்சிபி) கைது செய்தனா்.

அவா்களை அக்.7-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரித்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  அப்போது ஆர்யன் கான் உள்பட 8 பேருக்கும் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அந்த நீதிமன்றத்தில் தனக்கு ஜாமீன் அளிக்கக் கோரி ஆா்யன் கான் மனுத் தாக்கல் செய்தாா். இதனை விசாரித்த மும்பை நீதிமன்றம், இரு தரப்பு வாதங்களையும் கேட்டது. பின்னர் வழக்கின் மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.