தசரா விழா ஊர்வலத்தில் புகுந்த கார்: ஒருவர் பலி: 16 பேர் படுகாயம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் தசரா விழாக் கொண்டாட்டத்தின் போது கூட்டத்திற்குள் அதிவேகமாக வந்த கார் மோதி ஒருவர் பலியானர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர்.
தசரா விழா ஊர்வலத்தில் புகுந்த கார்: ஒருவர் பலி: 16 பேர் படுகாயம்
தசரா விழா ஊர்வலத்தில் புகுந்த கார்: ஒருவர் பலி: 16 பேர் படுகாயம்
Updated on
1 min read

சத்தீஸ்கர் மாநிலத்தில் தசரா விழாக் கொண்டாட்டத்தின் போது கூட்டத்திற்குள் அதிவேகமாக வந்த கார் மோதி ஒருவர் பலியானர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர்.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூரில் நடைபெற்ற தசரா விழா ஊர்வலத்தில் அதிவேகமாக வந்த கார் புகுந்தது. 

இதில் கார் மோதி ஒருவர் பலியானார். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். அதிவேகமாக வந்த கார் மோதி 4 பேர் கை, கால்கள் முறிந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com