தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 26 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,39,337 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | சுவையான சாம்பார் வைக்காததால் தாயை சுட்டுக் கொன்ற மகன் கைது
கடந்த 24 மணி நேரத்தில் 59653 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.04 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
மேலும் 36 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
இதுவரை மொத்தம் 14,13,921 பேர் குணமடைந்துவிட்டனர். மொத்த பலி எண்ணிக்கை 25,089 ஆக உள்ளது. இன்றைய நிலவரப்படி 327 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.