ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் மேலும் 2 தொழிலாளர்கள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள். மேலும் ஒரு தொழிலாளி காயமடைந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதிக்கு காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் விரைந்தனர்.
பயங்கரவாத தாக்குதலுக்கு ஆளான தொழிலாளர்கள் 3 பேரும் பிகாரைச் சேர்ந்தவர்கள். நேற்று 2 தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இன்று மீண்டும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மேலும் 2 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2 வாரங்களில் மட்டும் பொதுமக்கள் 11 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...