25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் மேலும் 2 தொழிலாளர்கள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:23 am

DIN

ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள். மேலும் ஒரு தொழிலாளி காயமடைந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதிக்கு காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் விரைந்தனர். 

பயங்கரவாத தாக்குதலுக்கு ஆளான தொழிலாளர்கள் 3 பேரும் பிகாரைச் சேர்ந்தவர்கள். நேற்று 2 தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இன்று மீண்டும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மேலும் 2 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். 
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2 வாரங்களில் மட்டும் பொதுமக்கள் 11 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.