
கேரளத்தில் கனமழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் பெய்துவரும் தென்மேற்கு பருவமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் கனமழையை பெற்றுள்ளன. திருவனந்தபுரம், கோட்டயம், இடுக்கி, பத்தினம்திட்டா உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
தொடர்ந்து பெய்துவரும் கனமழையிலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் காசர்கோடு, ஆலப்புழா, கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மக்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்த பாஜக முன்னாள் அமைச்சர்
ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் 24 மணி நேரத்தில் 6 செ.மீ. முதல் 20 செ.மீ. வரையிலான மழை அளவு பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.