நாட்டில் புதிதாக 18,454 பேருக்கு தொற்று: 160 பேர் பலி
புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,454 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 160 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 19,446 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் இன்று வியாழக்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 18,454 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,41,27,451-ஆக உயா்ந்துள்ளது.
இதையும் படிக்க | இந்தியா 9 மாதங்களில் 100 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை
17,561 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,34,95,808 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,78,831-ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 160 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,52,851 ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | பி.இ. முதலாமாண்டு மாணவா்களுக்கு நவ.1 முதல் வகுப்புகள் தொடங்க திட்டம்
நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 100 கோடியாக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதன்கிழமை மட்டும் 48,08,665 பேர் தடுப்பூசிகள் செலுத்தியுள்ளனர் சுகாதாரத்துறை பணியாளர்கள்.
இந்தியாவில் இதுவரை மொத்தம் 59,57,42,218 பரிசோதனைகளும், புதன்கிழமை மட்டும் 12,47,506 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.