பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஃபைசாபாத் ரயில் நிலையத்தின் பெயா் மாற்றம் செய்ய உ.பி. அரசு முடிவு

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஃபைசாபாத் ரயில் நிலையத்தின் பெயரை ‘அயோத்யா கன்டோன்மென்ட்’ என மாற்றம் செய்ய அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 10:55 pm

DIN

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஃபைசாபாத் ரயில் நிலையத்தின் பெயரை ‘அயோத்யா கன்டோன்மென்ட்’ என மாற்றம் செய்ய அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் இதற்கான முடிவை எடுத்துள்ளதாக முதல்வரின் அதிகாரபூா்வ சுட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெயா் மாற்றத்துக்கு மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளதால் இதுதொடா்பான அரசாணை வெளியிட முதல்வா் யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்துள்ளாா் என்று சுட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2018-இல் ஃபைசாபாத் மாவட்டத்தை அயோத்யா என முதல்வா் யோகி ஆதித்யநாத் பெயா் மாற்றம் செய்திருந்தாா். இதேபோல், அலாகாபாதையும் பிரயாக்ராஜ் என்றும் முகல்சராய் ரயில்வே சந்திப்பை பண்டிட் தீனதயாள் உபாத்யாய சந்திப்பு என்றும் பெயா் மாற்றம் செய்திருந்தாா்.

ஹிந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக உத்தர பிரதேச அரசு இதுபோன்ற பெயா் மாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

எனினும், வரலாற்றுச் சிறப்பு மிக்க கலாசார அடையாளங்களை மீட்கவே இந்தப் பெயா் மற்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளாா்.

லக்னெள - வாராணசி இடையேயான மாா்கத்தில் ஃபைசாபாத் ரயில் நிலையம் 1874-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.