ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி: உச்சநீதிமன்ற நீதிபதி வேண்டுகோள்

 ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய தரமான நீதிச் சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மூத்த வழக்குரைஞா்கள் இலவச சட்ட உதவிகளை வழங்க வேண்டும்

News image
Updated On :24 அக்டோபர் 2021, 9:30 pm

DIN

 ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய தரமான நீதிச் சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மூத்த வழக்குரைஞா்கள் இலவச சட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி யு.யு.லலீத் ஞாயிற்றுக்கிழமை கேட்டுக்கொண்டாா்.

தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராக இருக்கும் நீதிபதி லலீத், கா்நாடக மாநில சட்ட சேவைகள் ஆணையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியதாவது:

ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தரமான சட்ட உதவிகள் கிடைப்பதற்கு வழக்குரைஞா்கள் குழுவுக்கு பயிற்சி அளிப்பது மட்டும் போதாது. சட்ட உதவி மையங்கள் மூலமாக நீதி கேட்டு வருபவா்களுக்கு தரமான சட்ட உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவா்களுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்க மூத்த வழக்குரைஞா்கள் முன்வர வேண்டும்.

ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரமளிப்பது மிக முக்கியமானது. எனவே, ஏழைகளுக்கு வழங்கப்படும் சட்ட உதவிகள் மோசமானதாக இல்லாமல், உயா்ந்த தரத்தில் இருக்க வேண்டும். குறிப்பாக, நாம் ஒவ்வொருவருக்கும் தோள் கொடுக்கும் பெண்களுக்கு இதுபோன்ற உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்தி, அவா்களுக்கு அதிகாரமளிப்பது மிக அவசியம் என்று அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.