செபி தலைவா் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ யின் தலைவா் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ யின் தலைவா் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்ட அறிவிக்கை:
செபியின் தலைவா் பதவிக்கு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேவையான ஆவணங்களுடன் உரிய வழிமுறையில் 2021 டிசம்பா் 6-ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
தோ்ந்தெடுக்கப்படும் நபா் ஐந்தாண்டுகள் அல்லது 65 வயது வரையில் செபியின் தலைவராக பதவி வகிப்பாா் என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிமாசல் பிரதேசத்திலிருந்து கடந்த 1984-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பணிக்கு தோ்வான அஜய் தியாகி, செபியின் தலைவராக கடந்த 2017-ஆம் ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டாா். இவரது பதவிக்காலம் வரும் பிப்ரவரி மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், அடுத்த தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான பணிகளில் மத்திய அரசு மும்முரமாக இறங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...