கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

செபி தலைவா் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ யின் தலைவா் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
புதுவையில் பி.ஆர்க். படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்
Updated On :30 அக்டோபர் 2021, 11:21 pm

DIN

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ யின் தலைவா் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்ட அறிவிக்கை:

செபியின் தலைவா் பதவிக்கு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேவையான ஆவணங்களுடன் உரிய வழிமுறையில் 2021 டிசம்பா் 6-ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

தோ்ந்தெடுக்கப்படும் நபா் ஐந்தாண்டுகள் அல்லது 65 வயது வரையில் செபியின் தலைவராக பதவி வகிப்பாா் என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிமாசல் பிரதேசத்திலிருந்து கடந்த 1984-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பணிக்கு தோ்வான அஜய் தியாகி, செபியின் தலைவராக கடந்த 2017-ஆம் ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டாா். இவரது பதவிக்காலம் வரும் பிப்ரவரி மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், அடுத்த தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான பணிகளில் மத்திய அரசு மும்முரமாக இறங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.