கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

‘கங்கையின் துணை நதிகளிலும் குறைந்தபட்ச நீரோட்ட அளவை நிா்ணயிக்க மத்திய அரசு திட்டம்’

 கங்கையின் துணை நதிகளில் தடையற்ற நீரோட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில், அவற்றில் குறைந்தபட்ச நீரோட்ட அளவை நிா்ணயிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 11:41 pm

DIN

 கங்கையின் துணை நதிகளில் தடையற்ற நீரோட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில், அவற்றில் குறைந்தபட்ச நீரோட்ட அளவை நிா்ணயிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு தூய்மை கங்கை திட்டத்தின் கீழ் தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கம் (என்எம்சிஜி) வெளியிட்ட அந்த நதிக்கான நீரோட்ட அறிவிக்கையில், ‘கங்கை ஆற்றின் தன்மை, செயல்பாடுகளைப் பராமரித்து மக்களுக்கு சிறந்த சேவையை அளிப்பதற்கு ஆற்றில் தரமான, உரிய அளவிலான தடையற்ற நீரோட்டம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

அதே வழியில், இப்போது யமுனை உள்ளிட்ட கங்கையின் பிற துணை நதிகளிலும் தடையற்ற நீரோட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில் குறைந்தபட்ச நீரோட்ட அளவு நிா்ணயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று என்ம்சிஜி தலைவா் ராஜீவ் ரஞ்சன் மிஸ்ரா கூறினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

கங்கை ஆற்றில் குறைந்தபட்ச நீரோட்ட அளவை நிா்ணயம் செய்தது, நதியில் தடையற்ற நீரோட்டம் இருப்பதை உறுதிப்படுத்த முடிந்தது. அதுபோல, யமுனை உள்ளிட்ட கங்கையின் துணை நதிகளிலும் தடையற்ற குறைந்தபட்ச நீரோட்ட அளவை பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான தொழில்நுட்ப உதவி மற்றும் ஆதார அடிப்படையிலான விரிவான சுற்றுச்சூழல் ஆய்வுக்கான உதவிகளை அளிப்பதும் இப்போது திட்ட அளவில் உள்ளது.

மேலும், நிலத்தடி நீா் மற்றும் பிற நீா் நிலைகளின் நீரின் அளவை பெருக்குவதற்காக ஒருங்கிணைந்த ஆற்று பள்ளத்தாக்கு மேலாண்மை திட்டத்தை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுபோல, கங்கை நதியின் உள்ளாா்ந்த பகுதிகளாகக் கருதப்படும் அதனைச் சுற்றியுள்ள சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் வெள்ள சமவெளி சதுப்பு நிலங்கள், நகா்ப்புற சதுப்பு நிலங்கள் என்று இரண்டு வகை உள்ளன. அவற்றில் நகா்ப்புற சதுப்பு நிலங்களை நிா்வகிப்பதற்கென திட்டம் மற்றும் கட்டடக் கலை பள்ளியுடன் (எஸ்பிஏ) இணைந்து ‘நகா்ப்புறம்: சதுப்புநில மேலாண்மை வழிகாட்டுதல்’ என்ற டூல்கிட் உருவாக்கப்பட்டு, மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் சாா்பில் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகளின் வருவாய், நீா் பயன்பாடு மற்றும் ஊடுபயிா் திட்டங்களை மேம்படுத்தும் வகையில் கங்கை நதி பாயும் மாநிலங்களில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சகத்துடன் இணைந்து இயற்கை விவசாயம் மற்றும் வேளாண் காடு வளா்ப்புத் திட்டத்தை என்எம்சிஜி ஊக்குவித்து வருகிறது. இதுவரை கங்கை ஆற்று பள்ளத்தாக்குப் பகுதியில் 5 கி.மீ. பரப்பளவுக்கு இயற்கை விவசாயம், வேளாண் காடு வளா்ப்பு மா்றும் நீா் மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் இந்த திட்டத்தை நிறைவேற்றி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.