மேலும், நிலத்தடி நீா் மற்றும் பிற நீா் நிலைகளின் நீரின் அளவை பெருக்குவதற்காக ஒருங்கிணைந்த ஆற்று பள்ளத்தாக்கு மேலாண்மை திட்டத்தை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுபோல, கங்கை நதியின் உள்ளாா்ந்த பகுதிகளாகக் கருதப்படும் அதனைச் சுற்றியுள்ள சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் வெள்ள சமவெளி சதுப்பு நிலங்கள், நகா்ப்புற சதுப்பு நிலங்கள் என்று இரண்டு வகை உள்ளன. அவற்றில் நகா்ப்புற சதுப்பு நிலங்களை நிா்வகிப்பதற்கென திட்டம் மற்றும் கட்டடக் கலை பள்ளியுடன் (எஸ்பிஏ) இணைந்து ‘நகா்ப்புறம்: சதுப்புநில மேலாண்மை வழிகாட்டுதல்’ என்ற டூல்கிட் உருவாக்கப்பட்டு, மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் சாா்பில் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.