92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பிபிசியின் முதல் ஹிந்தி செய்தி வாசிப்பாளர் ரஜினி கௌல் காலமானார்

பிபிசியின் முதல் ஹிந்தி செய்தி வாசிப்பாளரான ரஜினி கௌல் நேற்று முன்தினம் (ஆக-31) தன்னுடைய 93வது வயதில் பாகிஸ்தானின் பரிதாபாத்தில் காலமானார்.

News image

பிபிசியின் முதல் ஹிந்தி செய்தி வாசிப்பாளர் ரஜினி கௌல் காலமானார்

Updated On :2 செப்டம்பர் 2021, 12:10 pm

DIN

பிபிசியின் முதல் ஹிந்தி செய்தி வாசிப்பாளரான ரஜினி கௌல் நேற்று முன்தினம் (ஆக-31) தன்னுடைய 93-வது வயதில் பாகிஸ்தானின் பரிதாபாத்தில் காலமானார்.

பெஷாவரில் பிறந்த ரஜினி கௌல்  தில்லியில் ஆல் இந்தியா ரேடியோவிலும் பின் 'வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா' செய்தி நிறுவனத்திலும்  பணியாற்றிய பின் லண்டனில் உள்ள பிபிசி செய்தியின் தலைமை அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்தார். 

அதற்கடுத்து 1961 ஆம் ஆண்டு முதல்  பிபிசியில் ஹிந்தி மொழி செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இவரே பிபிசியின் முதல் ஹிந்தி செய்தி வாசிப்பாளர் ஆவார்.

பின் அதே அலுவலகத்தில் பணிபுரிந்த மஹிந்த்ரா கௌல் என்பவரை திருமணம் செய்துகொண்டு லண்டனில் வாழ்ந்து வந்தவர் தற்போது பாகிஸ்தானில் 93 வயதில் காலமாகியிருக்கிறார்.

ரஜினி கௌல் 60 ஆண்டுகாலம் பிபிசியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.