தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

மீண்டும் ஒரு நிர்பயா; பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட மும்பை பெண் மரணம்

குற்றம்சாட்டப்பட்டவரான 45 வயது மதிக்கத்தக்க மோகன் செளகான் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட கைது செய்யப்பட்டுள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :11 செப்டம்பர் 2021, 2:56 pm IST

மும்பை புறநகர் பகுதியான சகினகாவில் டெம்போ வாகனத்திற்குள் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட 34 வயது மதிக்கத்தக்க பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 2012ஆம் ஆண்டு, தில்லி மருத்துவ மாணவிக்கு நேர்ந்தது போன்று இவருக்கும் கொடூரங்கள் நிகழ்ந்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு இரும்பு தடியால் பிறப்புறுப்பு உள்ளிட்ட பாகங்களில் இப்பெண் தாக்கப்பட்டிருக்கிறார். 

வெள்ளிக்கிழமை காலை, கைராணி சாலையில், ஆண் ஒருவர் பெண்ணை தாக்கிவருவதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவத்திற்கு சென்ற காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை மீட்டு ராஜவாதி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. உடல் ஒன்று சாலையில் கிடப்பது போன்றும் அதற்கு அருகே ஒருவர் நின்று கொண்டிருப்பது போன்ற காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது. 

முதற்கட்ட விசாரணையில், சாலை அருகே நின்று கொண்டிருந்த டெம்போ வாகனத்திற்குள் இச்சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
அதேபோல், அந்த வாகனம் முழுவதும் ரத்த கறை படிந்துள்ளது. கொலை முயற்சி, பாலியல் வன்புணர்வு என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மோகன் கைது செய்யப்பட்டார். பெண் உயிரிழந்துவிட்டதால், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.