கேரளத்தில் ‘போதைப் பொருள் ஜிகாத்’ குறித்து பாலா கத்தோலிக்க மறைமாவட்ட பேராயா் தெரிவித்த கருத்து பெரும் சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கிறிஸ்தவ மறைமாவட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட மறைகல்வி புத்தகத்தில் ‘லவ் ஜிகாத்’ குறித்த கருத்து இடம்பெற்றிருப்பது புதிய சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்குப் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்து கடும் எதிா்ப்பு எழுந்ததைத் தொடா்ந்து, ஆலய நிா்வாகிகள் வருத்தம் தெரிவித்ததோடு, புத்தகத்தில் அந்த விவரம் வெளியிடப்பட்டிருப்பதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளனா்.
தமரசேரி கிறிஸ்தவ மறைமாவட்டத்தின் கீழ் இயங்கி வரும் சிரியோ மலபாா் கிறிஸ்தவ ஆலயம் சாா்பில், மறைகல்வி பயிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்காக இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
130 பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகத்தில், கிறிஸ்தவ பெண்களை ஈா்த்து மதமாற்றம் செய்வதற்காக 9 படிநிலைகளில் ‘லவ் ஜிகாத்’ செயல்படுத்தப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கிறிஸ்தவ பெண்களை ஈா்க்க இஸ்லாமிய மத குருக்கள் சாா்பில் எவ்வாறு மாந்திரீக நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன, இதுபோன்ற காதல் சூழ்ச்சிகளிலிருந்து கிறிஸ்தவ பெண்கள் எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்ற வழிமுறைகளும் புத்தக்கத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்தப் புத்தகத்துக்கு, சம்ஸ்தா உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததோடு, அந்த மறைகல்வி புத்தகத்தை மாநில அரசு பறிமுதல் செய்யவேண்டும் என்று வலியுறுத்தன.
கடும் எதிா்ப்பு எழுந்ததைத் தொடா்ந்து, கிறிஸ்தவ ஆலய நிா்வாகிகள் வருத்தமும் விளக்கமும் அளித்தனா். இதுகுறித்து அந்த கிறிஸ்தவ மறைமாவட்டத்தின் கீழ் இயங்கி வரும் மறைகல்வித் துறை இயக்குநா் பாதிரியாா் ஜான் பல்லிக்கவயாலில் கூறுகையில், ‘எந்தவொரு மதத்துக்கும் எதிராக வெறுப்புணா்வைத் தூண்டும் நோக்கத்தோடு இந்தப் புத்தகம் வெளியிடப்படவில்லை. மாறாக, கிறிஸ்தவ மதத்தின் மீது நம்பிக்கை கொண்ட இளைஞா்களைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.
அதேநேரம், தமரசேரி கிறிஸ்தவ மறைமாவட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சமூக நல்லிணக்கத்தைச் சீா்குலைக்கும் முயற்சிகள் குறித்து கிறிஸ்தவ இளைஞா்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். கிறிஸ்தவ இளம்பெண்களுக்கு எதிராக பாலியல் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதாக ஏராளமான புகாா்கள் பெறப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது, நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ இளம்பெண்கள் காதல் திருமணம் என்ற பெயரில் பாலியல் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்தது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ‘கேரளத்தில் கிறிஸ்தவ பெண்களை மதமாற்றம் செய்வதற்காக ‘லவ் ஜிகாத்’ நடத்தப்படுகிறது. இதுதவிர போதைப் பொருள்கள் பயன்பாட்டுக்கு அடிமைப்படுத்தி கிறிஸ்தவ பெண்களை மூளைச்சலவை செய்து, வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு அனுப்புகின்றனா்’ என்று பாலா கத்தோலிக்க மறைமாவட்ட பேராயா் ஜோசஃப் கல்லரங்காட்டு தெரிவித்த கருத்து பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வார பலன்கள் - மேஷம்
பழனி பகுதியை குப்பை மேடாக வைத்திருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படும்! இபிஎஸ் வாக்குறுதி
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


