போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பழனி பகுதியை குப்பை மேடாக வைத்திருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை

பழனி பகுதியை குப்பை மேடாக வைத்திருக்கிறது திமுக அரசு என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

News image

அண்ணாமலை

Updated On :17 ஏப்ரல் 2026, 1:09 pm

பழனி பகுதியை குப்பை மேடாக வைத்திருக்கிறது திமுக அரசு என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், இன்றைய தினம், குன்றெல்லாம் அருளும் முருகப்பெருமான் ஆண்டியாகவும், அரசனாகவும் அருள்பாலிக்கும் பழனி சட்டப்பேரவைத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அஇஅதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரவி மனோகரனை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.

ஆண்டிற்கு ரூ.200 கோடி வருமானம் ஈட்டும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,500 கோடி. இருந்தும், பழனி பகுதியை மேம்படுத்தாமல், குப்பை மேடாக வைத்திருக்கிறது திமுக அரசு. தூய்மையான நகரங்கள் பட்டியலில் 585வது இடத்தில் பழனி இருப்பது வேதனைக்குரியது.

தமிழகத்தில் உள்ள ஊழல் குடும்பங்கள் பட்டியலில், முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கு பிறகு, ஐ.பெரியசாமியின் குடும்பம் இருக்கிறது. வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில், ஐ.பெரியசாமி, அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் உள்ளனர். எப்போது வேண்டுமானாலும் சிறைக்கு செல்லும் பயத்தில் இருவரும் இருக்கிறார்கள்.

விலைபோகாத மாட்டை வெளிசந்தைக்கு தள்ளி விடுவது போல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை திமுக, பழனிக்கு அனுப்பியுள்ளது. அவர்களுக்கு படுதோல்வியை பரிசளிக்க பழனி மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

கந்தன் அருளும் பழனியின் பெருமையை மீட்டெடுக்கவும், தமிழகத்தில் ஆன்மீக பெருமையை மீட்டெடுக்கவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வெற்றி வேட்பாளர் ரவி மனோகரனை பழனி மக்கள் மகத்தான வெற்றி பெற செய்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லட்டும்! பழனியின் பெருமை மீளட்டும்! இவ்வாறு குறிப்பிட்ள்ளார்.

Summary

Former BJP leader Annamalai has said that the DMK government is keeping the Palani area as a garbage dump.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.